வெள்ளி, 7 அக்டோபர், 2011

தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான்

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர்.
என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது. தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது. பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல. தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும். இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும். தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும். விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இறந்தவர் உடலை பாதுகாக்க...


வாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது. மரணம் ஏற்பட்டவுடன் இதயத்துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.

மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழிந்த பின்னர்தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பல சந்தர்ப்பங்களில் காலம் தாழ்ந்துவிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பைப் பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுகிறது.

இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.

இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்க வேண்டியிருந்தால் மருத்துவமனையில் உள்ள Fixed Mortuary Boxல் வைத்து பாதுகாக்கலாம். 0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக்கப்படும்.

இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச் செல்லவேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.

Embalming வசதிகள் பெரிய மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலும் கிடைக்கின்றன

உடலுக்கு விடுதலை


அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றி உடலுக்கு விடுதலை அளிப்பதால் அந்த பெயர்.

பலன்கள் : வயிற்றில் சுரக்கும் அதிக அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், வயிற்று புற்று நோய் ஆகியவை வராமல் தடுக்கும். வாயு கோளாறுகளை போக்குவதால் புத்துணர்ச்சியை நாள் முழுவதும் அளிக்கிறது. மலச்சிக்கல் செரியாமை, வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. உடல்., எடை, அதிக வயிற்று தசை ஆகியவற்றை குறைக்கிறது. மாரடைப்பு நோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாட்டினை அதிகரிக்கிறது. மூல வியாதி கோளாறுகள், இரத்தக் குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டுவலி, வயிற்றுவலி பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஆகியவற்றை போக்குகிறது. பிரசவித்த பெண்களின் அடிவயிற்று பெருக்கத்தை குறைப்பதற்கு அர்த்த ஹலாசனம் செய்தவுடன் இந்த ஆசனத்தை செய்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்.

செய்முறை : 1.

1. இந்த ஆசனத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து செய்ய வேண்டும்.

2. சவாசனத்திலிருந்து கால்களை ஒன்று சேர்க்கவும். வலது காலை உயர்த்தி மடித்து கால் முட்டியை வயிற்றை நோக்கிக் கொண்டு வரவேண்டும்.

3. கை விரல்களை ஒன்று சேர்த்து முட்டியை பிடித்து வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும்.

4. இடது காலை மடிக்காமல் தலையை உயர்த்தி எழுந்து முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.

5. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்து விட்டு தலை, கால்களை பிரித்து விரிப்பின் மீது படுக்கவும்.

6. மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்பு போல் செய்யவும்.

7. வலது இடது என மாற்றி மாற்றி மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திடல் ஓய்வு எடுக்கவும்.

எண் : 2.

1. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டு வரவும்.

2. கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால்முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும்.

3. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்துவிட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கவேண்டும்.

4. மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திற்கு வரவேண்டும்.

குறிப்புகள் :

1. சாதாரண மூச்சில் பழக வேண்டும். அப்படி முடியாதவர்கள் வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுத்து செய்யவும்.

2. கழுத்துவலி உள்ளவர்கள் தலையை உயர்த் தாது தரையின் மீது வைத்து கால்களை மட்டும் மடித்து அழுத்தம் கொடுத்து செய்யவேண்டும்.

அப்படி செய்து வந்தால் நாற்பது வயதிற்கு மேல் வரும் ‘லும்போ சேக்ரல்ஸ்பாண்டி லைடிஸ்’ மற்றும் ‘லும்போ எவர்டிலரே” எனும் அடிமுதுகு வலி (இடுப்பும் முதுகுத்தண்டும் சேரும் இடம்) குணமாகும் (கடைசி ஐந்து முதுகுத்தண்டு வட எலும்புகளின் இறுதியில் சேக்ரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேக்ரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக் கொடுமையாக இருக்கும்)

படகு ஆசனம்
நவ்காசனம்:

குடல் ஏற்றம் தெரியாமல் கோடி வைத்தியம் பார்த்தானாம் - பழமொழி.

வயிற்றின் நடுப்பகுதி தொப்புள் ஸ்தானம் ‘ஸோலார் பிளக்ஸ்’ என்று கூறுவர். தமிழில் வயிற்று மூளை என்று பெயர். காரணம் நமது மனநிலைக்கு ஏற்ப இப்பகுதி மேல் நோக்கி நகர்வதை குடல் ஏற்றம் என்று கூறுவர். இதை எந்த மருத்துவ சிகிச்சையாலும் குணம் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் இன்றும் உச்சி முடி எடுத்தல் அல்லது சொருகு எடுத்தல் என்ற முறையில் இதை குணம் செய்வர்.

அப்படி மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி குடல் நகர்வதால் நமக்கு ஏற்படும் விளைவுகள்.

1. வயிற்றில் எரிச்சல்
2. தொப்புளை சுற்றி வலி
3. அதிக வாயு பிரிதல்
4. செரியாமை
5. மலச்சிக்கல்
6. வயிற்று போக்கு
7. வாந்தி எடுத்தல் அல்லது
வாந்தி வருவது போல் இருத்தல்.
8. கண்பார்வை குறைதல்.
9. இதய படபடப்பு
10. தூக்கத்தில் விந்து வெளியேறுதல் அல்லது சிறுநீர்போதல்.
11. பெண்களுக்கு வெள்ளை படுதல்.
12. மாதவிடாய் கோளாறுகள்.
13. குழந்தை இன்மை.
14. இளநரை ஏற்படுதல்
15. பல் கோளாறுகள்
16. தலையில் வழுக்கை ஏற்படல்

போன்ற கோளாறுகள் தோன்றலாம். இவைகள் வராமல் இருக்க இவ்வாசன பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன.

பலன்கள் :

1. வயிற்று தசைகள், உள் உறுப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதால் கணையம் நன்கு இயக்குகிறது. அதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

2. நரம்பு தளர்ச்சியை போக்குகிறது.

3. வயிற்றில் தோன்றும் புழுக்களையும், பூச்சிகளையும் எளிதில் மலத்தின் மூலம் வெளியேற்றுகிறது.

4. நுரையீரல், கல்லீரல், கிட்னி மலக்குடல் ஆகியவற்றில் வேலைகளை துரிதப்படுத்துகிறது.

5. ஆண், பெண்களின் போக சக்தியை அதிகப்படுத்துகிறது.

6. உந்திக்கமலம் (தொப்புள் மணிப்பூரக சக்கரம்) இடம் பெயராதவாறு காப்பாற்றுவதோடு ஏற்கனவே இடம் பெயர்ந்திருந்தாலும் சரி செய்கிறது.

7. நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.

8. இளமையைக் காப்பதில் இவ்வாசனம் பெரும் பங்கு வகிக்கிறது.

செய்முறை :

1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்து மல்லாந்து படுக்கவும்.

2. இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும்.

3. கால் மூட்டுப் பகுதிகளை இரண்டு கைகளால் சிறுகப் பிடிக்கவும்.

4. கால்களை மடிக்காமல் வேகமாக பூமியை நோக்கிக் கொண்டு வரவும், அதே நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து உயர்த்தி இடுப்பு புட்டபகுதி மட்டும் தரையின் மீது இருக்கும்படி வைத்து சமநிலைப்படுத்தவும்.

5. சமநிலைக்கு உடம்பும் கால்களும் வந்ததும் கைகளை பிரித்து உள்ளங்கைகளை கால் முட்டியின்போது சற்று உயர்த்தி நிறுத்தவும். இது ஒரு படகு நீரில் மிதக்கும் அமைப்பு போன்று இருக்கும்.

15 எண்ணிக்கைகள் அப்படியே சாதாரண மூச்சில் இருந்து விட்டு முதலில் தலையை தரை மீது கொண்டு வந்து படுக்கவும், பிறகு கால்களை தரை மீது வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும். இதுபோல் இவ்வாசனத்தை 3 தடவைகள் செய்ய வேண்டும்.

குறிப்புகள் :

1. உடம்பை பூமியிலிருந்து உயர்த்த முடியாத வர்கள் ஒரு பெஞ்ச் மீது முதலில் கால்களை வைத்துவிட்டு பிறகு கைகளை ஊன்றி எழுந்து இவ்வாசனத்தை பழகலாம்.

2. அடி முதுகு வலி உள்ளவர்கள் இவ்வாச னத்தை செய்யக் கூடாது.

3. முதல் மூன்றுநாட்கள் அடி வயிற்றில் சிறிது வலி தோன்றும் 4ம் நாள் வலி குறைந்து வலி போய்விடும். அவசரம்வேண்டாம்.

4. காலை கண்விழித்து எழுந்ததும் படுக்கையிலேயே இவ்வாசனத்தை செய்து வந்தால் உடலில் சுறுசுறுப்பு தோன்றி மலம் இலகுவாக வெளியேறும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?



குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.




செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

புகை பிடிக்க தடை


தென்காசி : வடகரை கீழ்பிடாகை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டத்தின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வடகரை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுபேர் ஹசன் தலைமை வகித்தார். வடகரை டவுன் பஞ்., தலைவர் அஜீஸ் துவக்கி வைத்தார். வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்

செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2007 இலவச நியூஸ் லெட்டர் பெற செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
இடுகையிட்டது K.K.SANDU VADAKARAI நேரம் 11:35 AM
லேபிள்கள்:

மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்


மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு...
பிறைநதிபுரத்தான்
'உங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும்- சம அந்தஸ்துள்ள இந்துக்களாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்' என்று அடல் பிஹாரி வாஜ்பாய் - மக்வானா- சுப்பிரமனிய சுவாமி - போன்ற இந்து தேசிய தலைவர்கள் தேவ (சமஸ்கிருத & ஹிந்தி) பாஷைகளில் சொன்னதையெல்லாம் - தமிழக பாஷையில் மொழி பெயர்த்து தலித்களுக்கு கூறினர். ஆர்.எஸ்.எஸ் தடாலடியாக, உயர் சாதி இந்துக்களுக்குரிய 'பூநூலை' - தலித்களுக்கு அணிவித்து அவர்களை முழு அந்தஸ்துள்ள இந்துவாக சான்றிதழ் கொடுப்பதாகவும் ஆசைக்காட்டியது.
அப்போதைய மத்திய அரசு விசாரனை கமிசன் அனுப்பி மறைமுகமாக மிரட்டியது; தமிழக அரசின் மந்திரிசபையே (எம்.ஜி.ஆரை தவிர) வருகை புரிந்து தனக்கேயுரிய பாணியில் தலித்களை கெஞ்சியும் - கொஞ்சியும் பார்த்தது. ஆனால் இவை எதற்கும் 'மசிந்து' மனம் மாறாமல் - இராகு காலம் - எம கண்டம் பார்க்காமல், 1981ல் மதம் மாறி 'அகண்டபாரதம்' காண எண்ணியவர்களின் வயிற்றில் புளியை கரைத்தவர்கள்தான் மீனாட்சி புரத்தை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்கள்.
இந்து மதத்தை விட்டு போவதால் 'சமூக அந்தஸ்த்து' உயரப்போவதில்லை' 'சமூகம் விடுதலை பெற மதமாற்றம் சரியான மார்க்கமல்ல' என்று 'பூச்சாண்டியும்' 'அறிவுரையும்' வழங்கினர் 'சனாதான' சமூக ஆர்வலர்களும் - தலைவர்களும்.
'சமூக அந்தஸ்து' மட்டும் கோரியா தலித்கள் மதம் மாறினர்? இல்லை. தலித் குடியிருப்பில் இல்லாத அடிப்படை தேவைகளான குடிநீர்- மின்சாரம்- சாலை வசதிகளையும் கேட்டுத்தான் மதம் மாறினர். இஸ்லாமியர்களாக மாறிய தலித்களுக்கு சமூக அந்தஸ்த்து கிடைப்பதற்கு சிறிது காலம் பிடித்தது என்னவோ உண்மைதான் ஆனால் உயர் சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்த பஸ் வசதி - மின்சாரம் - சிமென்ட் சாலை - தண்ணீர் தொட்டி போன்றவைகள் மீனாட்சிபுர மதமாற்றத்திற்கு பிறகு அக்கம்பக்கத்து தலித் கிராமங்களுக்கும் கேட்காமலே கிடைத்தது.
"ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும். இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு" (வெ.சா) என்று மீனாட்சிபுர தலித்களின் மதமாற்ற முடிவை கொச்சை படுத்தியும் - ஆசைக்காட்டி அவர்களை 'மதம் மாற்றியதாக' சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்களையும் சாடுகிறார்.
இஸ்லாமிய மதத்தை தெர்ந்தெடுப்பதற்கு முன்பாக மற்ற மதங்களை பற்றியும் ஆய்வு செய்ததாகவும் - புத்த மதம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லையென்றும் - இந்து மதம் போலவே கிறித்துவ மதத்தில் 'சாதீயம்' புரையோடியிருக்கிறதாகவும் - அதனால்தான் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர் மதம் மாறிய தலித்கள்.
தலித்கள் மதம் மாறுவதை 'இந்துத்வ' சக்திகள் எதிர்த்தது போலவே சில இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் எதிர்த்தனர்- சாதிப்பெயரை சொல்லியழைப்பதிலும் - இரட்டை குவளைகளை பயன்படுத்துவதிலும் - ஆதிக்க சாதியினரை பின்பற்றினர். நாலனாவுக்கும் - எட்டனாவுக்கும் 'புளுக்க' வேலை செய்பவனெல்லாம் தொப்பி போட்டு 'துளுக்கனாக' ஆகிவிட்டால் - என்ன செய்வதென்ற சுய நலத்தோடும்- உயர்சாதியினரின் கோபத்திற்காளகி விடுவோமென்ற பய உணர்வோடும் தலித்களை மத மாற்றம் செய்ய மறுத்தனர்.
மதம் மாற நிணைத்த தலித்கள் பாளையங்கோட்டையிலுள்ள தென் இந்திய இஷா-அத்துல் சபையை அனுகிய போது நூற்றுக்கணக்கான கேள்விகளை எதிர்கொண்டனராம், இந்து மதத்தை துறக்க காரணங்கள் என்னவென்று உலமாக்களால் வினவப்பட்டனராம் - ஆரிய சமாஜம் போல ' இந்துவாக மாறனுமா வாங்கோ - ஐந்தாயிரம் ரூபாய் தாங்கோ' ன்னு நடைபாதை கடைகாரன் போல கூவிக்கூவி அழைக்கவில்லையாம்.
ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெற - எதிர்கொள்ள மீனாட்சிபுர தலித்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடனே அக்கம்பக்கத்திலுள்ள சில கிராமங்களில் சாதீய உறவுகளில் தடாலடி மாற்றம் ஏற்பட்டது - வர்னாசிரம சிந்தனை ஆட்டம்கண்டது. டீக்கடைகளில் உள்ள இரட்டை குவளைகளில் ஒன்று மாயமாய் மறைந்தது - ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைப்பது குறைய ஆரம்பித்தது. 'பள்ளப்பயலே' என்றழைத்தவர்கலெல்லாம் 'பாய்' என்றழைக்க ஆரம்பித்தனர். தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கலெல்லாம் - வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். அது மட்டுமல்ல, மதம் மாறிய தலித்களால் - மதம் மாறாதா கீழ்சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் அளவிற்கு சாதீயகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு - 'சமூக அந்தஸ்த்து' தரப்பட்டது. (இது சமூக அந்தஸ்தா (!) என்று வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)
மதம் மாறிய தலித்களை 'தீட்டு கழிக்காமல்' 'பரிகாரம் செய்யாமல்' அரவணைத்துக்கொண்ட சுற்றுவட்டார முஸ்லிம்கள் (தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், அச்சன்புதூர், வடகரை) பாரபட்சம் காட்டாமல் திருமண உறவுகள் வைத்துக்கொண்டனர். கோயிலுக்குள் நுழையவும் - தங்களுக்காக தனிக்கோயில் கட்டிக்கொள்ளவும் - சேரி வீதிகளில் 'சாமி' வலம் வரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல் சட்டைப்போடுவதற்கு கூட போராடியவர்கள் - மதம் மாறியதும் 'தொப்பி போட்டுக்கொண்டு' ஜமாத் தலைவராக - பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினராக உலா வர முடிந்தது. வேதங்களை கேட்கக்கூட அருகதையற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள், ஒலி பெருக்கி மூலம் ஐவேளையும் தொழுகை அழைப்பு (பாங்கு) விடும் அதிசயம் நடந்தது. (இவைகள் மதம் மாறிய தலித்களை இஸ்லாமியர்கள் சமமாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களாக கருத தகுதியானவைகளா என்பதை வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்).
முஸ்லிம்களாக மதம்மாறினால் - இருக்கின்ற இட ஒதுக்கீட்டு சலுகைகள் எல்லாம் பறிபோய்விடுமென்று தெரிந்தும் - மதமாறிய மீனாட்சிபுர தலித்களை, வளைகுடாவிலிருந்து வந்த ரூ 500- நோட்டுக்காகவும் - இஸ்லாமியர்கள் போட்ட 'பிரியானி' பொட்டலங்களுக்காகவும்தான் மதம் மாறினார்கள் என்று இந்துத்துவவாதிகள் வழக்கம்போல கொச்சைப்படுத்தினர். மதமாற்றம் பற்றி ஆய்வு செய்த ஆறுமுகம் கமிட்டி அறிக்கையில் - மதமாற்றத்திற்கு வளைகுடா பணமோ அல்லது 'பிரியாணி' பொட்டலங்களோ காரணமல்ல என்று அறிக்கை சமர்ப்பித்து வரலாற்று திரிபர்களின் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மதம்மாறிய தலித்கள் அரபு ஷேக் குகளைப்போல் - 'ஷோக்காக' வாழ்கிறார்கள் என்ற ஆர்ய சமாஜத்தினரின் கூப்பாடு 'கோயாபல்ஸ்' வகையை சார்ந்தது என்ற ஹிந்து நாளேடு 'மதம்மாறிய பின் தலித்களின் சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பது உண்மை - பொருளதார அந்தஸ்து உயரவில்லை' என்ற உண்மையை போட்டு உடைத்தது...
மீனாட்சிபுர மதமாற்றத்திலிருந்து தமிழக தலித் கிராமங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன தெரியுமா? எப்பொதெல்லாம் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லையோ- அவர்களின் வசிப்பிடத்திற்கு தேவையான அடிபடை வசதிகள் மறுக்கப்படுகிறதோ - அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ - அப்பொழுதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஆயுதமாக மாறியது 'இஸ்லாமியர்களாக மாறப் போகிறோம்" என்ற முழக்கம். முழக்கமிட்ட அடுத்த கனமே அரசு அதிகரிகளும் - IAS அதிகாரிகளும் விரைந்து வந்து வேண்டியதை செய்து கொடுத்தனர். இந்த ஆயுதத்தை கையிலெடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த வடநாதம்பட்டி தலித்களும் - காஞ்சி மாவட்டத்தை சார்ந்த கூத்திரம்பாக்கம் தலித்களும் வென்றெடுத்த உரிமைகள் பல.

வடகரை ஜோதிடர் கொலை

தென்காசி : வடகரை ஜோதிடர் கொலை வழக்கில் அவரது மனைவி, மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (43). ஜோதிடரான இவர் தனியார் நிறுவனத்திற்கு நிலம் வாங்கி கொடுப்பதில் புரோக்கராக செயல்பட்டுள்ளார். குருசாமியை கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை 1 மணியளவில் அவரது வீட்டின் முன் ஒரு கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.இச்சம்பவம் குறித்து குருசாமியின் மனைவி பரமேஸ்வரி (30) அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி.கண்ணப்பன், எஸ்.பி.ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி.மயில் வாகனன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பீமராஜ், கனகராஜ், ஸ்ரீஜாராணி, முருகானந்தம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர விசாரணையில் ஜோதிடர் குருசாமி கொலையில் அவரது மனைவி பரமேஸ்வரி உட்பட 7 பேர் சம்பந்தப்பட்டது தெரிய வந்தது.
இதுபற்றிய விபரம் வருமாறு:ஜோதிடர் குருசாமிக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு நிலம் வாங்கி கொடுத்த வகையில் அவருக்கு அதிக பணம் கிடைத்துள்ளது. இதனால் அவர் மது, மங்கை என ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார். மேலும் சில திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். குருசாமி தனது அக்காள் மகள் பரமேஸ்வரியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண், இரண்டு மகன்கள் உள்ளனர்.குருசாமி தனது மனைவியை அடிக்கடி சந்தேகப்படுவாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் சந்தேகப்பார்வையால் பரமேஸ்வரி மன வேதனையடைந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண வீட்டில் பரமேஸ்வரி செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிசங்கர் (24) என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் அப்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரின் கொடுமை பற்றி ரவிசங்கரிடம் பரமேஸ்வரி கூறியுள்ளார்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்


மேற்கு தொடர்ச்சி மலையில் கொள்ளை போகும் மூலிகை செடிகள்

பதிவிடுசுரேஷ் செவ் ஜன 22, 2008 12:03 pm

நெல்லை: நெல்லை மாவட்டத்தில், தமிழக, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், கொடிகள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் புகழ் வாய்ந்த பெருகை நதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி முதல் தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மேக்கரை, வடகரை, கருப்பாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழக வனப்பகுதி.

இந்த வனப்பகுதிகளின் உள்ளே அரிய வகை மூலிகைகள், அரிய வகை விலங்கினங்கள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, மான், மிளா வகைகளும் உள்ளன.

சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் ஆசியோடு அரிய வகை மூங்கில்கள், பிரம்பு என்றழைக்கப்படும் மூலிகை கொடிகள், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களும், வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பிரம்பு, இருக்கைகள், சோபா, கட்டில், டீபாய், ஊஞ்சல் போன்றவை செய்ய பயன்படுகிறது. செங்கோட்டை, பிரானூர் பார்டர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலை நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு வடநாட்டிலிருந்து பிரம்பு மூங்கிலை வாங்கி வந்து அதன் மூலம் தொழில் புரிவதாக காட்டிக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமாக விளைந்து, வளர்ந்து அடர்ந்து கிடக்கும் பிரம்பு மூங்கிலை வனத்துறையினரின் ஆசியோடு வெட்டி கடத்தி வந்து வியாபாரத்தை வளப்படுத்தி வருகின்றனர்.

இந்த அரிய வகை பிரம்பு மூங்கில் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் உள்ள விஐபிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என நெல்லை மாவட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கி விடுவதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்துறையில் பணிபுரிவர்கள் வீடுகளில் அதிகமாக இருக்கும் பொருட்களில் இதுவும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மூங்கில்களை மொத்தமாக வெட்டி மதுரை, திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஜவுளி கடைகளில் தேவைப்படும் பைகளில் கைப்பிடியாக இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அடர்ந்த காடுகளாக இருந்த வனப்பகுதிகளான அடவிநாயினார் நீர்தேக்கம், வடகரை, பழைய குற்றாலம், புளியரை, கண்ணுபுளிமேட்டு ஆகிய பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து விட்டு செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த சமூகவிரோத கும்பலை இதுவரை ரிஷிமுலம் காணாமல் வனத்துறை உள்ளதாகவும் ஒரு சில ஏழைகளை மட்டும் கைது செய்து அடையாளம் காட்டி விட்டு பெரும் புள்ளிகளை காப்பாற்றி விடுவதாகவும், கூறப்படுகிறது.

அரிய வகை இயற்கை வளம் அழிந்து வருவதால் வனங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது.

நன்றி: தேட்ஸ்தமிழ்.காம்